30 ஆயிரம் அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு

இலங்கை முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே தடவையில் இவ்வாறு பெருமளவிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதால் அரச சேவை எவ்வகையிலும் வீழ்ச்சி அடையாது என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews