கிளிநொச்சி காணிக் கிளை முடக்கம்…!

கிளிநொச்சி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் பாலசுந்திரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார். காணிக்கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் ... Read more »

அதீத கொரோணா பரவல் காரணமாக கிளி சேவைச்சந்தை மூடல்….!

கிளிநொச்சியில் கொரோனாப் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி சேவைச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பொருத்தமான பொது இடங்களில் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது. வியாபாரிகளும்... Read more »

வெளிநாட்டு விமானத்தில் இரகசியமாக அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து வெளியான தகவல் –

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விமான அம்பியூலன்ஸ் மூலம் இலங்கையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் இரகசியமாக சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனிலிருந்து மஸ்கட் வழியாக... Read more »

தொடரும் கொரோணா அபாயம் யாழில் 111,வடக்கில் 138…!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 111 பேர் உட்பட வடமாகாணத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் 523 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 111 பேருக்கு... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று! |

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தகவல்கள் தொிவிக்கின்றன.  நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைத்திய அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து வைத்திய அதிகாரி கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போதைய ஊர்காவற்றுறை வைத்தியசாலை பொறுப்பதிகாரி ஊர்காவற்றுறை பிரதேச... Read more »

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் மரணம்…!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அச்வேலியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறை – தும்பளையை சேர்ந்த... Read more »

நாடு முழுவதும் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா? தீவிரமாக ஆராய்கிறது அரசு.. |

சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடு முழுவதும் இன்று முதல் தினசரி இரவு 10 மணி... Read more »

மண மக்களின் பெற்றோர், சாட்சிகள் மற்றும் பதிவாளருடன் பதிவுத் திருமணத்தை நடாத்துவதற்கு அனுமதி! |

பதிவுத் திருமணங்களை வீடுகளில் மிக மிக குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் வீட்டில் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். இதன்படி திருமண வைபங்கள் வீட்டிலோ மண்டபங்களிலோ நடாத்த மிக கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பதிவு திருமணத்தை தம்பதிகளின்... Read more »

கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் பராமரிப்பு, சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு.. |

வடக்கு மாகாணத்திலும் இன்று தொடக்கம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில்... Read more »

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது! 30 பேருக்கு இதுவரை தொற்று உறுதி… |

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more »