மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்.

NRFC கணக்குகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Novard Cabral) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வதியோதோர் வெளிநாட்டு நாணய வைப்பு கணக்குகளில் பேணப்பட்டு வரும் கணக்குள், ரூபா கணக்குளாக மாற்றப்படும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பில் வெளியான தகவல் போலியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் பற்றி பதிவொன்றை மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews