தடையற்ற மின்சார விநியோகம் இன்று வழங்கப்படுமா? மின்சாரசபை அதிகாரி ஒருவர் தொிவித்துள்ள தகவல்.. |

நாடு முழுவதும் இன்று தொடக்கம் தடையின்றி மின் விநியோகத்தை வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை நம்பிக்கை தொிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை (03) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளறின் காரணமாக பா நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் சீரமைக்கப்படும் வரை பல பகுதிகளில் மணிக்கணக்காக மின்சாரம் தடைப்பட்டது.

இதனால் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை 6 மணி முதல் 09 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் தடையின்றி மின்சாரம் வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews