துன்னாலையில் ஒருவர் கைது! |

யாழ்.துன்னாலை பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலைப் பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து

குறித்த இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நெல்லியடி பொலிஸாரிடம்,

ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews