அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று உயர்மட்ட கலந்துரையாடல்.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவித்திருக்கின்றன. இந்நிலையில் வைத்தியசாலையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read more »

தமிழர்களும் முஸ்லீம்களும் எதிர்காலத் தலைமுறை பற்றி சிந்திப்பது அவசியம். சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசிய கட்சிகளும் மலையக முஸ்லீம் கட்சிகளும் இணைந்து இந்திய அரசிற்கு அனுப்பவிருந்த ஆவணம் முஸ்லீம் கட்சிகள் கையொப்பமிட தயங்குவதால் பின்நிலைக்குச் சென்றுள்ளது. 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி இந்தியாவைக் கோரவிருந்த ஆவணம் பின்னர் “இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்” என... Read more »

தமிழ்த் தேசியத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பவிருந்த ஆவணம் பலத்த இழுபறிக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டு சனிக்கிழமை இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆவணத்தின் உள்ளடக்கம் பற்றி இக் கட்டுரை எழுதும் வரை எதுவும் தெரியவில்லை. “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளும் இலங்கை... Read more »

இந்தியப்பிரதமருக்கான கடிதமும் தமிழ் மக்களும்…… சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்பப்பட என இருந்த கடிதம் இன்னமும் இந்தியத்தூதுவரிடம்  கையளிக்கப்படவில்லை. சம்பந்தன் நல்ல நாள் பார்த்து இந்தியத்தூதுவரிடம் கையளிக்க வேண்டும் என்பதற்காக தாமதப்படுத்தியிருந்தார். கடைசியில் கடந்த செவ்வாய் கையளிப்பதாக இருந்தது. தூதுவர் அவசரமாக டில்லி சென்றமையினால் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவில்லை. இந்த... Read more »

தோல்வியடைந்த தளங்களில் ஏற முனையும் சம்பந்தன்….!சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக தமிழ்த்தரப்பிலிருந்து பலத்த கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.  இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் கூறவில்லை என்பதற்காகவே இவை எழுந்துள்ளன. சம்பந்தன் பலத்த ஏமாற்றமடைந்துள்ளதாக பசில்ராஜபக்சவிற்கு நேரடியாகவே கோபத்துடன் கூறியுள்ளார். “நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” எனவும் சாபம் போட்டிருக்கின்றார். சம்பந்தனுக்கு... Read more »

பூஸ்டர் தடுப்பூசி பெறாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வு..!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி பெறாமல் உள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தான கூறினார். மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள்... Read more »

யாழ்.கொக்குவில் – நந்தாவில் பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வாகனங்கள் தீக்கிரை, வீடு சேதம்.. |

யாழ்.கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களை அடித்து நொருக்கி, தீ வைத்துக் கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளது. நேற்றய தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

யாழ்.மானிப்பாயில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாள்கள், கோடரிகள் மீட்பு..!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 2... Read more »

கொள்ளையடித்த மோட்டார் சைக்கிளுடன் தப்பி ஓடும்போது முதியவரை மோதி விபத்து! முதியவர் பலி, கொள்ளையர்கள் சிக்கினர்…..!

யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதயவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த சம்பவத்தில், ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார்.சுன்னாகம்... Read more »

இந்திய படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விற்பனை செய்யும் தீர்மானத்தை வரவேற்கிறோம்!..சம்மேளனம்….. !

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை விற்பனை செய்யும் முடிவு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் அதனை முழு மனதுடன் ஒத்துக்கொள்கிறோம்.  மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.... Read more »