வடமராட்சி மீனவர்கள் போராட்டத்திற்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு…..!

கடந்த 30/01/2022 ம் திகதி முதல் பருத்தித்துறை சுப்பர் மடத்திலிருந்து தொண்டமனாறு வரை வீதியை மறித்து எல்லை தாண்டும் மீனவர்களை தடை விதிக்க வேண்டும் என எழுத்து மூலமான ஆவணத்தை கோரி நடாத்தப்படுகின்ற போராட்டத்திற்கு பருத்தித்துறை கௌரவ நீதவான்  நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விரட்டிய மீனவர்கள், சற்றுமுன் பரபரப்பு…..!

கடந்த நான்கு நாளாக போராட்டத்தில் ஈடிபட்டுக் கொண்டிருக்கும் மீனவர்களை சற்ற முன்னர் சந்திக்க சென்ற மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சுப்பர் மடம் மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். குறித்த மீனவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு மீனவர்கள்... Read more »

நான்காவது நாளாக தொடரும் மீனவர் போராட்டம்….!

எல்லை மீறிய இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரிய மீனவர்கள் போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.இம் மக்கள் போராட்டத்திற்கு பருத்தித்துறை போலீஸ் அதிகாரி தலமை பொலீஸ் பொறுப்பு அதிகாரி பிரியந்த அமரசிங்க   தலமையில் 24 மணிநேரம்  பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். Read more »

ஏ9 வீதியை முடக்கி ஆரம்பிக்கப்பட்டது போராட்டம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து  யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அத்துமீறும்... Read more »

யாழ்.கோண்டாவிலில் வன்முறை குழு வீடு புகுந்து அட்டகாசம்! 3 ரவுடிகள் கைது, காதல் விவகாரமே காரணம் என தகவல்.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வான்முறை கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில், துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரவுடிகளை கைது செய்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,  மோட்டார் சைக்கிளில் வந்த குழு... Read more »

கர்ப்பவதி பெண் கொலை..! 5 வருடங்களின் பின் பிரதான சந்தேகநபர் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்.. |

யாழ்.ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் ஹம்சிகா  என்ற 27 வயதான கர்ப்பவதி பெண் 2017ம் ஆண்டு தை மாதம்... Read more »

யாழ்.பலாலியில் வெடிபொருள் மீட்பு..!

யாழ்.பலாலிப் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் நேற்றுமுன்தினம் வெடிகுண்டு விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது. குறித்த காணிகள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குண்டு மீட்கப்பட்டது. Read more »

ஏழாலையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் முற்றுகையிடப்பட்ட வீடு..! 21 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது.. |

யாழ்.ஏழாலை – களவா ஓடை பகுதியில் சுமார் 80 லீற்றர் கசிப்பு மற்றம் 21 லட்சம் பணம் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த பகுதியில் கசிப்பு வியாபாரம் இடம்பெறுவதாக தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கசிந்த நிலையில், சம்பவ இடத்தை முற்றுகையிட்ட... Read more »

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி இன்று காலை போராட்டம்..!

யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி இன்று காலை பாரிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.  இந்திய மீன்வர்களின் அத்துமீறலைக் கண்டித்து 3 நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் யாழ்.மாவட்ட மீனவர்களுக்கு உரிய தீர்வு இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் இன்று மாவட்ட... Read more »

யாழ்.மாவட்டத்தில் தீவிரமாகும் கொரோனா அபாயம்!

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதான பெண் குழந்தை உட்பட 20 பேருக்கும், வடக்கில் 33 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு வயதான பெண் குழந்தை மற்றும் 12 பெண்கள் உட்பட 17 பேருக்கும், சங்கானையல் இருவருக்கும், தெல்லிப்பழையில் ஒருவருக்குமாக மாவட்டத்தில்... Read more »