கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம்! நிபந்தனைகளை உள்ளடக்கி திருத்தப்பட்ட சுற்றுநிருபம் வெளியானது.. |

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 5ம் திகதி தொடக்கம் அமுலுக்குவரவுள்ளது. அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன, கொவிட் தொற்றினால்... Read more »

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்….!

மட்டக்களப்பில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்தி, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரவலாக பல... Read more »

மாதகல் வீதியில் இனந்தெரியாத நபரின் சடலம்…..!

இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – மாதகல் வீதியில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச் சடலமாக உள்ளவரின் முகம் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. எனினும் அவர்... Read more »

அங்கஜனின் ஆட்களால் தமிழ்தேசிய கூதத்டமைப்பு உறுப்பினர் வீடு மீது தாக்குதல்……?

நேற்றிரவு, போதையில் சென்ற  நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரை கூறிக்கொண்டு  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டிற்க்கு  தாக்குதல்  நடாத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் புகுந்து தாக்குவதற்கு... Read more »

சிவகுரு ஆதீனத்தில் இடம் பெற்ற சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்……!

சிவராத்திரி விழா சிவகுரு ஆதீனத்தில் தவத்திரு வேலன்சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றுள்ளன. இதில்  சைவ சமய அமைப்பினர், சமயப்பெரியார்கள், சிவ தொண்டர்கள், மாணவர்கள், அடியார்கள் ஒன்று கூடி சிவலிங்கப்பெருமானுக்கு தங்கள் கைகளினாலே அபிஷேகம் செய்து நான்கு காலப் பூஜைகளையும்  சிறப்பாக செய்து வழிபாடாற்றியதுடன்  கலைநிகழ்வுகள்,... Read more »

மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்திகள், டோர்ச் லைட்டுகளுடன் யாழ்.செம்மணியில் போராட்டம்..!

மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்று மாலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில்  மக்களின்... Read more »

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

இலங்கையின் வடகிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது... Read more »

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்…..!

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி... Read more »

வவுனியாவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்….!

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கற்பகபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக குறித்த பெண்ணுக்கும் அவரது உறவினரான ஆண்... Read more »

தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்…..!நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.

தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம்... Read more »