அங்கஜனின் ஆட்களால் தமிழ்தேசிய கூதத்டமைப்பு உறுப்பினர் வீடு மீது தாக்குதல்……?

நேற்றிரவு, போதையில் சென்ற  நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரை கூறிக்கொண்டு  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டிற்க்கு  தாக்குதல்  நடாத்தப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் புகுந்து தாக்குவதற்கு முயற்சித்ததோடு தடுக்க முயன்ற பிரதேசசபை உறுப்பினரின் தந்தையையும் கீழே தள்ளி தாக்கியதுடன், வீட்டின் கேற்றையும் வேலி தகரங்களையும் சேதமாக்கி வீட்டிலிருந்த பெண்களையும் அச்சுறுத்தியமையால் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பும் குழப்பநிலை தோன்றியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Recommended For You

About the Author: admin