கொழும்பு – மகஸீன் சிறைச்சாலையில் உணவ தவிர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் 12 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்னாக நேற்று காலை தொடக்கம் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, 2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்... Read more »
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் இன்று இன்ற வடமரட்சியில் தொாடர்கிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது நேற்று முன்தினம் மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டது இலங்கை தமிழரசு... Read more »
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எரிபொருள் இருந்தும் காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை செயற்படுத்துவதில்அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர் என மக்கள் தெரிவிக்கின்றன. இதனால், இன்று (12) திங்கட்கிழமையும் பாதைச் சேவை இடம்பெறமாட்டாது எனத் தெரியவருகின்றது. காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவைக்கான ஒரு... Read more »
காவலாளியை கொலை செய்துவிட்டு காருக்கு பயன்படுத்தும் பக்க கண்ணாடியை திருடிய சம்பவம் நேற்று அதிகாலை நீர்கொழும்பு – தழுவகொட்டுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்த காவலாளியை தாக்கி கை மற்றும் வாய், கால்களை... Read more »
தொண்டமனாறு வெளிக்கள நிலையம் என்ற தனியார் நிறுவனத்தை வடமாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வி திணைக்களமும் பாதுகாப்பதாக கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கு எதிர்வரும் 14.09.2022 திகதிக்குள் விளக்கமளிக்குமாறு, இலங்கை... Read more »
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த 85 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை... Read more »
யாழ்.மண்டைதீவு சோதனை சாவடியில் வைத்து சுமார் 50 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். தீவகத்திலிருந்து பயண பையில் மாட்டிறைச்சியை பதுக்கி எடுத்துவருவது தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் 50 கிலோ இறைச்சியை கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்... Read more »
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்த 15 வயதான சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ்... Read more »
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இன்றைய தினம் கிளிநொச்சிக்கான. விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். முதலாவதாக பூநகரிப்பிரதேசத்தில் உள்ள தெளிகரை குளம் மற்றும் ஈநொச்சி குளத்தை புனரமைக்கும் வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.குறித்த இரண்டு குளங்களும் உலக வவங்கியின் 68.59 மில்லியன் ரூபா செலவில் காலநிலைக்கு சீரமைவான... Read more »
துன்னாலை வடக்கு நவிட்டான்பதி மனோன்மணி சக்தி சமேத காளிகாம்பாள் தேவஸ்தான நூதன புனர்ருத்தன சம்பரோஷண மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை(09) காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து காளியம்பிகை, விநாயகர், முருகன், வைரவர் போன்ற... Read more »