வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்..!

கொழும்பு – மகஸீன் சிறைச்சாலையில் உணவ தவிர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் 12 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்னாக நேற்று காலை தொடக்கம் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019, 2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய், சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews