பொலிஸ் அதிரடி சுற்றிவளைப்பில் பெண் உட்பட 8 பேர் கைது! வாள்கள் மீட்பு.. |

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை அதிரடியாக சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 8 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த நடவடிக்கையில் 35 கிராம் ஹெரோயின், 100 போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அளுத்கடை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews