அனுமதி பெறாமல் ஒன்றுகூடல்கள் நடாத்த தடை..! வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்.. |

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஒன்றுகூடல்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் இன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, முழு நாட்டிற்கும்... Read more »

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தினரால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள்.

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தினரால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூரிச் அருள்மிகு சிவன்கோயிலின் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின்  கரம் கொடுக்கும் செயற் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் வெள்ளத்தால்... Read more »

13வது திருத்தம் அரசியல் தீர்வும் அல்ல! ஆரம்பப்புள்ளியுமல்ல. (சி.அ.யோதிலிங்கம்)

நம்பிக்கை இழந்த இந்தியா தமிழ் அரசியலில் மூத்த கட்சியான அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நம்பிக்கை இழந்த இந்தியா தனது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு செல்வம் அடைக்கலநாதனையும், மனோ கணேசனையும்,ராவூப் ஹக்கீமையும் அணுகத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் திண்ணை விடுதியில் கடந்த... Read more »

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவர் வீதி விபத்தில் படுகாயம்…..!

வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சையிக்கிளினை பட்டப்பகலில் திருடிக்கொண்டு அதிவேகத்தில் பயணித்தவர் வீதிவிபத்தில் சிக்கினார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை முசுரம்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் 10.11.2021 வீட்டு முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த மோட்டார் சைக்கிளினை பட்டப்பகலில்... Read more »

ரவிராஜை கெளரவப்படுத்திய புலிகள்: நிகழ்வை தவிர்த்த சாவகச்சேரி தமிழ் அரசு கட்சியினர்!

படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றன.  ... Read more »

சம்பிக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலே, விவசாய அமைச்சர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை! 7584 குடும்பங்கள் பாதிப்பு, 75 வீடுகள் சேதம்/

யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் சுமார் 7584 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொிவித்துள்ளது.  நேற்று மாலை 6.30 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

வெள்ளத்தில் சிக்கிய வெளிமாவட்டத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுக்கு உதவிய யாழ்.மாநகர முதல்வர்.. |

யாழ்.பல்கலைக்கழகத்தில் பரீட்சைக்காக வந்து தங்கி இருக்கின்ற மாணவர்களின் வாடகை அறைகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தினால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். எனினும் பின்னர் பல்கலைக்கழகத்தின் ஊடாக விடுதிக்கு விண்ணப்பித்து விடுதியில் தமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுள்ள நிலையில் அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்... Read more »

விரைந்து செயற்பட்ட மாநகர முதல்வர்,குவியும் பாராட்டுக்கள்….!

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் பெய்த கனமழையினால் நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியிருந்தபோதும் சில மணி நேரத்தில் நகர் பகுதியிலிருந்து மழை வெள்ளம் அகற்றப்பட்டிருக்கின்றது.  யாழ்.மாநகரசபை முதல்வர்  வி.மணிவண்ணன் மற்றும் நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் மாநகரசபை ஆணையாளர், மாநகரசபை பணியாளர்கள் ஆகியோரின் துரித நடவடிக்கையால்... Read more »

கைது செய்யப்பட்ட 19 போில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளடக்கம்! |

கடல்வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.  சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 19 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டதுடன் வாகனம் ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.... Read more »