பளை விபத்து சிறுவன் படுகரும்…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட a 9 வீதியில்  ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமை ஏ9  இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது பளைநோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன்  டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சிறுவன் பளை நோக்கி  துவிச்சக்கர வண்டியில்  குடை பிடித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை காற்றுக்கு குடை மடிந்தவுடன் வீதி மறைத்துள்ளது இதனால் முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் ழூக்குப்பகுதியில் காயமடைந்த சிறுவன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி ழூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews