அனுமதி பெறாமல் ஒன்றுகூடல்கள் நடாத்த தடை..! வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்.. |

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஒன்றுகூடல்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் இன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, முழு நாட்டிற்கும் அதிகாரம் பெற்றுள்ள உத்தியோகத்தர் ஒருவரால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்காக பிறப்பிக்கப்படும் கட்டளைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அனுமதி பெறாது ஒன்றுகூடல்கள் , செயற்பாடுகள் , ஒன்றுகூடலுக்கான சந்தர்ப்பம் ஏற்படும் வகையிலான நிகழ்வுகள் என்பவற்றை நடத்தக்கூடாது என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதேனுமொரு தரப்பினரால் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு ,

குறித்த விதிமுறைகளை மீறும் வகையிலான செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகளுக்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டாலும் அவற்றில் பொது மக்கள் கலந்து கொள்ளக்கூடாது

என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews