அரச ஊழியர்களின் சம்பளத்தை 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் .லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில்... Read more »

அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

முல்லைத்தீவில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் (01.05.2023) கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால்... Read more »

சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது!

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை... Read more »

விசேட அதிரடி படையினரின் சமிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு…!

விசேட அதிரடிப்படையினருக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு வீதித்தடைகளைப் போட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்திற்கு அண்மித்த வலிக்கண்டிப் பகுதியில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பல வாகனங்கள் மறித்து சோதனையிடப்பட்டது. இரவு... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்…!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உழைக்கும் பராயத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,  மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும்,... Read more »

மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு மகிந்தவுக்கு! இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் மே தினக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ராஜபக்சர்களை... Read more »

பெண் ஊடகவியலாளரின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பம் – அமைச்சர் பந்துல

பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐடிஎன் அதிகாரிக்கு எதிராக உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. உள்ளக மற்றும் அமைச்சரவை மட்டத்திலான விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள... Read more »

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையளார்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்றையதினம்(01.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொதுப் போக்குவரத்து சேவையை தரமான... Read more »

லங்கா ஐஓசியும் எரிபொருட்களின் விலையை குறைத்தது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு அறிவித்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு... Read more »