பெண் ஊடகவியலாளரின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பம் – அமைச்சர் பந்துல

பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐடிஎன் அதிகாரிக்கு எதிராக உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

உள்ளக மற்றும் அமைச்சரவை மட்டத்திலான விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள பந்துலகுணவர்த்தன தான் துன்புறுத்தல்களிற்குள்ளானதாக குறிப்பிட்ட பெண் ஊடகவியலாளர் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளபோதிலும் அவர் உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் எவற்றையும் பதிவு செய்யவில்லை இருந்தபோதிலும் விசாரணகைள் ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடும் எனக்கு கிடைக்கவில்லைஇஊடக அமைச்சின் செயலாளருக்கோ அல்லது ஐடிஎன் நிர்வாகத்திற்கோ இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லைஎன தெரிவித்துள்ள அமைச்சர் எனினும் பெண் செய்தவாசிப்பாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊடக அமைச்சின் செயலாளரையும் ஐடிஎன் நிர்வாகத்தையும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews