ரணிலின் வரவு செலவுத் திட்டம் சிறந்தது! அமைச்சர் பந்துல பெருமிதம்

ரணில் அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் சிறந்தது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு – செலவுத்... Read more »

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 11 பேர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை இன்று(31) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான தாரக பாலசூரிய,... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அரசமற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி... Read more »

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐந்து நாட்களும்... Read more »

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் காலமானார்

பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985 இல் ஆட்சிக்கு வந்த கோர்பச்சேவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தை உலகிற்குத் திறந்து, உள்நாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். எனினும் நவீன ரஷ்யாவினால் தோன்றிய சோவியத்... Read more »

கோட்டாபயவை கைவிட்ட நெருங்கிய நண்பர்கள் இருவர்!

முன்னாள் அதிபர் கோட்டாபயவின் நெருங்கிய நண்பர்களாக ஒரு காலத்தில் இருந்த இருவர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து முன்னாள் அதிபரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிப்பதில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்த இருவர், முன்னாள் அதிபர் இலங்கையிலிருந்து... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், தங்க விலையில் சற்று வீழ்ச்சி காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 623,418.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 கரட் 1 கிராம்... Read more »

ரணிலைக் கைவிட்ட 13 பேர்! எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய உறுப்பினர்கள் – சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்

ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இதனை இன்றைய அமர்வில் அறிவித்துள்ளார். விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் இதனை கூறினார். இதன்படி, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும,... Read more »

வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம்

தேசிய வீரர் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களின் பின் நீக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25ஆம் திகதி... Read more »

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்! மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் வரிசைகள்

தற்போது மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், காசோலை முறைமையை இடைநிறுத்தியதன் காரணமாக, ஒரே தடவையில் பணத்தை செலுத்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாததாலேயே இந்த நிலைமை... Read more »