பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அரசமற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மேலும் செப்டம்பர் 13 ஆம் திகதி புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin