பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்

பிரித்தானியாவில் முதல் முறையாக சிவப்பு தீவிர வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் லண்டன், மான்செஸ்டர் மற்றும் யார்க் உள்ளிட்ட பகுதிகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள்... Read more »

கனடாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்: கனேடிய அரசாங்கம்

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கனடா வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் கட்டாயமாக தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கோவிட் பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11ம் திகதி ரத்து செய்யப்பட்டது.... Read more »

கோட்டாவுக்கு எதிராக மாலைதீவில் போராட்டம்.

கோட்டாபய ராஜபக்சவின் வருகையை கண்டித்து மாலைதீவில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். மாலைதீவின் தலைநகரான மாலேயில் சிறிலங்காவைச் சேர்ந்தோர் எவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்பதை சமூக வலைத்தள பயனனாளி ஒருவர் வெளியிட்ட காணொலி வாயிலாக அறிய முடிகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கா கொடி... Read more »

மட்டு.கண்டியனாறு கிராமத்தில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருநூறுவில் – உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.... Read more »

இலங்கையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா அறிவிப்பு!

இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக இதனை குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில்... Read more »

அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை அதிகாரிகளிடம் அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின்... Read more »

நாட்டில் நாளை வெடிக்கும் பல போராட்டங்கள்: இலங்கை மக்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள செய்தி!

இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டங்கள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளதால் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாளைய போராட்டங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில்... Read more »

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஜப்பானிய முன்னாள் பிரதமர் மரணம்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு மரணித்ததாக... Read more »

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

கமல்ஹாசனை புகழ்ந்த அமெரிக்க நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல... Read more »