கோட்டாவுக்கு எதிராக மாலைதீவில் போராட்டம்.

கோட்டாபய ராஜபக்சவின் வருகையை கண்டித்து மாலைதீவில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

மாலைதீவின் தலைநகரான மாலேயில் சிறிலங்காவைச் சேர்ந்தோர் எவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்பதை சமூக வலைத்தள பயனனாளி ஒருவர் வெளியிட்ட காணொலி வாயிலாக அறிய முடிகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கா கொடி மற்றும் அரசுக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு காணப்படுகின்றனர்.

மாலைதீவில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews