கனடாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்: கனேடிய அரசாங்கம்

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கனடா வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் கட்டாயமாக தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கோவிட் பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11ம் திகதி ரத்து செய்யப்பட்டது.

 

தற்போது கோவிட் பாதிப்பு அதிகரிப்பதால் பரிசோதனை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் ஜூலை 19ம் திகதி முதல் வான்கூவர், கல்கரி, மாண்ட்ரீல் மற்றும் டொராண்டோ ஆகிய 4 முக்கிய விமான நிலையங்களுக்கு வருபவர்கள் கோவிட் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews