நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது... Read more »
உக்ரைன் தலைநகர் கியேவைச் சுற்றி மேலும் இராணுவ முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது உக்ரைனிய துருப்புக்கள் 30 நகரங்கள் மற்றும் கியேவ் பிராந்தியத்தின் குடியேற்றங்களை ரஸ்ய படைகளிடமிருந்து மீட்டெடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் இன்று தெரிவித்துள்ளார் உக்ரைனிய படைகள் தலைநகருக்கு அருகில் உள்ள... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.00 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணி வரை, பாதுகாப்பு அல்லது பொது பாதுகாப்பு செயலாளர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு இடங்கள், மைதானங்கள், புகையிரத நிலையங்கள்,... Read more »
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலிலிருந்த நேரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் நேற்று மாலை 6.30 மணியளவில் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது ஓர் நபர் தனது மோட்டார்... Read more »
அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட விலைக்கு மாத்திரமே சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 2675 ரூபா எனவும்,... Read more »
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றுள்ள நிலையில், பிரித்தானியா பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார... Read more »
அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட... Read more »
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியான மின்தடையால் நோயாளர்கள் அவதியுறும் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மின்வெட்டு நேரம் வைத்தியசாலையில் உள்ளம் மின் பிறப்பாக்கிகள்... Read more »
திங்கள் கிழமை தொடக்கம் நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது. மின் துண்டிப்பு இடம்பெறுவதன் காரணமாக மாணவர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டே இந்த பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. Read more »