யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் விரிவுரையாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை..!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் நேற்று முன்தினம்... Read more »

பாண் விலை 30 ரூபாவினாலும், மற்றைய பேக்கரி உற்பத்திகள் 10 ரூபாவினாலும் உயர்வு..!

இலங்கையில் கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Read more »

www.elukainews.com (எழுகை நியூஸ்) வாசக நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »

டீசலுக்கு காத்திருந்து மயங்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் பரிதாப மரணம்..!

காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணிவரை உணவில்லாமல் டீசலுக்காக வரிசையில் காத்திருந்த 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, உயிரிழந்த நபர் கடந்த 2ம் திகதி டீசல் வாங்குவதற்காக... Read more »

சற்றுமுன்னர் அவசரகால சட்டம் நீக்கம்!

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று... Read more »

அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா !

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சிக்கல் நிலைமைக்கு மத்தியில், தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று இரவு பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிரதமர் தனது பதவியை... Read more »

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி! –

இராஜதந்திர பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தமது வழமையான செயற்பாடுகளை இன்றைய தினம் முன்னெடுக்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.அவர்கள் தமது பணியிட அடையாள அட்டையை பயன்படுத்தி ஊரடங்கு சட்ட காலத்தில் பயணிக்க முடியும் என அவர்... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு! –

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபரில் நடத்துவதற்கும், டிசம்பரில் இடம்பெற வேண்டிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன்... Read more »

சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டாரவுக்கு பிணை! –

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சமூக ஊடக ஆர்வலரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கம்பளை முட்டுவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக 28 வயது சமூக... Read more »

தலை பிறை தென்பட்டது: இன்று முதல் நோன்பு ஆரம்பம்.

ஹிஜ்ரி-1443 புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, இன்று அதிகாலை முதல் நோன்பை கடைப்பிடிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது Read more »