பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வட்டக்கச்சி பகுதியில் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலிற்மைவாக,  குறித்த பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக... Read more »

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்துவிட்டனர்….!அரசியல் ஆய்வளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம்.

இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் நேற்று (09)... Read more »

அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் – ஞானசார தேரரின் செயலணி பரிந்துரை.

புனர்வாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்புச் செயற்பாட்டின் பின்னர் ஈழப் போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது.... Read more »

மூளாய் மனித வள முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி….!

மூளாய் மனித வள அபிவிருத்தி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மனித வள முன்பள்ளி மாணவர்களின் 2022 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி 03.07.2022 புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான முருகவேல்... Read more »

13வது திருத்தத்தை தமிழ் மக்களது தலையில் கட்ட முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்த வாரம் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு... Read more »

சுற்றுலா பயணிகள் மேற்கொண்ட ஹோட்டல் பதிவுகளில் 45 சதவீதம் இரத்து.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மேற்கொண்ட ஹோட்டல் முன்பதிவுகளில் சுமார் 45 சதவீதமானவை போராட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது சுற்றுலாத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... Read more »

புலம்பெயர் இலங்கையர்களின் அழுத்தமே கோட்டாபயவிற்கு விசா வழங்க முக்கிய நாடுகள் மறுப்பு – நிமலன் விஸ்வநாதன்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான டொலர்களைக் கொண்டு வருவதற்கு புலம்பெயர் மக்கள் தயாராக இருப்பதாக இலங்கை புலம்பெயர் அமைப்பின் தலைவர் நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட தேவையான முழுத் தொகையையும் இலங்கை கொண்டு வர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இணைய... Read more »

ரணிலின் எம்.பி. பதவி காலியானது – உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022... Read more »

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மிக சிறப்பாக மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்துடன் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை இணைந்த ஏற்பாடு செய்த சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நீருற்று பூங்கா... Read more »

குருந்தூர் மலை விவகாரம் நீதிபதி, சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினர் நேரில் சென்று ஆய்வு..! திருத்திய கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது.. |

முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான திருத்தத்துடன் கூடிய புதிய கட்டளையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன், திருத்திய கட்டளையில் தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதி கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட... Read more »