மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மிக சிறப்பாக மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்துடன் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை இணைந்த ஏற்பாடு செய்த சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நீருற்று பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு நீருற்று பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்குப்பட்டு தொடர்ந்து வெள்ளைநிற மல்லிகையோ கீதம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான எம் .பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை அங்கத்தவர்கள் ,மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews