மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பின் பல இடங்களில் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.

மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏராவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, நாவலடி, ஆகிய பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சமையல் எரிவாயு விநியோகம் செய்த இடங்களில் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எரிவாயு விநியோகத்தரான சொல்கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு கிடைக்கப்பெறும் போது  முகநூல் பக்கத்தில் அறிய தரப்படும் எனவும். வீணான வதந்திகளை நம்பி பொதுமக்கள் வரிசைகளில் இரவு பகலாக காத்திருக்க வேண்டாம். எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் காலங்களில் ஏற்கனவே வழங்கிய பொது இடங்களில் சமையல் எரிவாயு வழங்கப்பட மாட்டாது எனவும் மாறாக வேறு சில பொது இடங்களிலேயே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews