சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். குறித்த மாகாணங்களின்... Read more »
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »
அல்வாய் வடமத்தி, அல்வாய் மாவிலங்கடி வீயியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் (07) முற்பகல் மீட்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வேதார்வளவு, வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சேதுராமலிங்கம் (வயது- 81) என்பவராவார். மேற்படி வயோதிபர் மாவிலங்கடி வீதியில் அதிகாலை 12.30 மணியளவில் விழுந்து கிடந்ததை... Read more »
வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் இரண்டு மணித்தியாலத்திற்குள் பருத்தித் துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (07) பருத்தித் துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதி சேர்ந்த பெண் தலைமைத்துவ... Read more »
கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார். கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் தவறி விழ்ந்த மாணவி நேற்று உயிரிழந்ததாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்ற பாவலன் பானுசா (வயது 18) என்ற மாணவியை... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுமந்திரன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணிக்குச்... Read more »
காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோகம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை 2023 ஜூலை 19ஆம் திகதியன்று மீள அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.... Read more »
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள பிபார்ஜோய் (Biparjoy) சூறாவளி மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் படகுகளை பாதுகாப்பான... Read more »
ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மருதங்கேணி போலீசாரின் கடமைகளுக்கு இடையூறு விழைத்ததாக தெரிவித்து கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டு... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். சாணக்கியன் எம்.பி. சபையில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:- நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கைது... Read more »