ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது…!கஜேந்திரகுமார்

ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மருதங்கேணி போலீசாரின்  கடமைகளுக்கு இடையூறு விழைத்ததாக தெரிவித்து கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மாலை  கிளிநொச்சி மாவட்டநீதிவான்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து ஒரு லட்ச ரூபாய் சரீரப்பனையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த  தற்காலிக வெளிநாட்டு பயண தடையும் நீக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து  பிணையில் விடுதலையாகி வந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதாவது தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பு போலீஸ் என்பதால் அந்த தரப்பையும் விசாரிக்க வேண்டிய பொறுப்பு பொலிசாரிடம்  இருப்பதனால் போலீசார் விசாரணைகளை பக்க சார்பாக முன்னெடுத்து தங்கள் மீது ஒரு அடக்குமுறையை  பிரயோகிக்கின்ற வகையிலேயே இந்த சம்பவம் கைது சம்பவம்  இடம்பெற்றிருக்கின்றது.
 இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.
அந்த அடிப்படையிலே குறித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் உயரதிகாரிகள் மட்டத்திலே இந்த விசாரணை  முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றில்  தெரிவித்திருக்கிறதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படைகளிலும் இந்த போலீசாரும் உள்ளடங்குகின்றனர ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews