நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்தக் கதியெனில் தமிழ் மக்களின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்! இரா.சாணக்கியன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மிகவும் வன்மையாகக் கண்டித்தார்.

சாணக்கியன் எம்.பி. சபையில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கைது நடவடிக்கையானது அவரின் சிறப்புரிமையை மீறிய செயலாகும்.

ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்தக் கதியெனில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையைச் சிந்தித்துப் பாருங்கள். கொள்கைகள் வேறு படினும் என்றும் அநீதிக்காக எமது குரல் ஒலிக்கும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews