சப்ரகமுவ ஆளுநர் பதவி விலகல்

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.

குறித்த மாகாணங்களின் முந்தையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது.

அதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews