சமூக ஊடகங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை இன்று மட்டக்களப்பில்.

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தொடர்பான இரண்டாம் கட்ட விழிப்புணர்வு பயிற்சி பட்டறை  மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் பொதுமக்களுடன் தொடர்பாடல்களை கொண்டுள்ள அரச அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர்... Read more »

நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் கௌரவிப்பு.

அம்பாறை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கொரோனா தொற்று... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டத்தரணிகளால் மூன்று சட்டநூல்கள் வெளியீடு.

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு,திருமதி ஜெகநாதன் சுபராஜினி ஆகியோரால் மூன்று சட்ட நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன. சிரேஸ்ட சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் தலைமையில் இன்று தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சட்ட நூல்கள் வெளியீடும் நிகழ்வு இடம்பெற்றது. சிரேஸ்ட சட்டத்தரணி... Read more »

போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல்! 18 பேர் கைது, 3 பொலிஸார் வைத்தியசாலையில்.. |

போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கொழும்பு – பொரளை பகுதியில் அண்மையில் போக்குவரத்து கடமையில் இருந்த 3 பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவத்தில் 3 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில்,... Read more »

சீருடையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்.

பொலிஸ் சீருடையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர், 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரின் சீருடை பையில்... Read more »

ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் : திகதி வெளியானது.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும்... Read more »

ரிஷாட் பதியுதீன் முல்லைத்தீவு தமிழ், முஸ்லிம் பகுதிகளுக்கு விஜயம்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலாளித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று காலை (30) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம் செய்து, அங்கு... Read more »

சித்திரவதையில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது

பயங்கரவாத சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு, சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்குவதற்காக பயங்கரவாத... Read more »

அபாயகரமான ஆயுதங்களுடன் வல்வெட்டித்துறை பகுதியில் 13 இளைஞர்களை பொலீஸாரால் கைது.

அபாயகரமான ஆயுதங்களுடன் வல்வெட்டித்துறை பகுதியில் 13 இளைஞர்களை பொலீஸாரால் கைது செயப்பட்டுள்ளனர் இச்சம்பவம் இச் சம்பவம் சற்று முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில்  இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை வல்வை மகளிர் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பொது இடத்தில் இளைஞர்கள் கூடியிருப்பதாக வல்வெட்டித்துறை பொலீஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து... Read more »

கட்டாக்காலி கால்நடைகள் கட்டுப்படுத்துக

தற்போது அனைத்து பகுதிகளிலும் பெரும் போக பயிற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் கண்டாவளை, முரசுமோட்டை, பெரியகுளம், கல்மடு  போன்ற பல பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகள் நடமாடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளில் தினமும் பயிர்களை நாசம் செய்து வருவதாக தெரிவிக்கின்ற... Read more »