கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே இவ்வாறு... Read more »

யாழில் இடம்பெற்ற கைதுகள்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபரிடமிருந்து 18 துவிச்சக்கர வண்டிகள் முழுமையாகவும்,உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றியுள்ளனர்.... Read more »

இலங்கையை சேர்ந்த எழு பேர் அகதிகளாக இந்தியா சென்றடைவு

இலங்கையை சேர்ந்த ஏழு பேர் இன்றைய தினம் அகதிகளாக இந்தியா – இராமேஸ்வரம்பகுதியைச் சென்றடைந்துள்ளனர். இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை படகு ஒன்றிற்கு கொடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5... Read more »

இணைந்த வடக்கு கிழக்கிலே இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்….! எம்.கே.சிவாஜிலிங்கம்.

சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்கான கோரிக்கைகளை எங்களுடைய தமிழ்த் தேசிய அணிகள் முன்வைக்க மக்கள் வலியுறுத்த... Read more »

அமைதியான முறையில் முடிவுகளை எடுங்கள் – அஸ்கிரி பீடம்.

அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் அமைதியான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக கட்சி அரசியலின்றி மனசாட்சிக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள்... Read more »

சீனாவிடம் கடன் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை.

4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவிக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், சீனா அதற்கு உடன்படும் என்று நம்புவதாக சீனாவுக்கான இலங்கையின் தூதுவரை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் கடனுக்குச் சமமான தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக கொழும்பு சீனாவிடம் 1 பில்லியன் அமெரிக்க... Read more »

கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் வெளியானது அதி விசேட வர்த்தமானி.

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (15.07.2022) வெளியிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 38(1)(அ) சரத்திற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை.

எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அபாய நிலை ஏற்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றிரவு டீசல் கப்பலொன்று நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை... Read more »

முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கூடுதல் அதிகாரம் – அமைச்சரவை அனுமதி.

முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் வழங்க நேற்று (15) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கலவரக்காரர்களின் கைகளில் துப்பாக்கிகள் சிக்குவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கிகளை விரைவில் மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்... Read more »

இலங்கையில் பெட்ரோல் விலை 110 ரூபாவால் குறைக்க முடியும் – ஆனந்த பாலித.

உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் முன்வைத்துள்ள... Read more »