அடுத்த கிழமையும் மூடப்படும் பாடசாலைகள்! வெளியானது அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளும் ஜூலை 18 முதல் 20 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தகவல் அறிவித்துள்ளது. மேலும், கல்வி அமைச்சு வெளியிட்ட தகவலின் படி, ஜூலை 21ஆம் திகதி புதிய தவணை தொடங்கும் என தெரியவருகிறது. ... Read more »

ரணில் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்:லஹிரு வீரசேகர

ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக கூட நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததை போராட்டகாரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பதவி... Read more »

பதில் ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம்

ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  இந்த விடயத்தை பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று காலை... Read more »

புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் சந்தர்ப்பம் மக்கள் கையில்: அனுரகுமார திஸாநாயக்க

புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் சந்தர்ப்பம் மக்களிடம் வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விரைவில் இந்த சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சமூக ஊடகங்களின் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தவறினால் நாடாளுமன்றிற்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்... Read more »

நாட்டின் நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சினையல்ல: சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி... Read more »

கனடாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்: கனேடிய அரசாங்கம்

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கனடா வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் கட்டாயமாக தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கோவிட் பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11ம் திகதி ரத்து செய்யப்பட்டது.... Read more »

மட்டக்களப்பில் போக்குவரத்து நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு

நாட்டின் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மட்டக்களப்பில் குறுந்தூர பேருந்து சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள்ளேயே இன்று(15) தற்காலிகமாக இந்த குறுந்தூர பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க... Read more »

நிரந்தர தீர்வு அவசியம்! மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை போக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்தும் அதே வேளையில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளையும் மீட்டெடுக்க உறுதியான நிரந்தர தீர்வுகள் இருக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. நாட்டின் ஊழல் மற்றும்... Read more »

மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவருக்கு எந்த நாடும் அடைக்கலம் வழங்காது: ஜீவரெத்தினம் தவேஸ்வரன்.

21ஆம் நூற்றாண்டில் மனித குலத்தின் ஓர் இனத்தை கருவறுத்த செயற்பாட்டினை முன்னெடுத்த ஒரு ஜனாதிபதிக்கு மனித உரிமையினை நேசிக்கும் எந்த நாடும் அடைக்கலம் வழங்காது என தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பில் இன்று... Read more »

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி: பொலிஸார் மறுப்பு

நாடளாவிய ரீதியில் இன்று(15) மாலை ஐந்து மணிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியினை பொலிஸார் மறுத்துள்ளனர். குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு... Read more »