வவுனியா மன்னார் வீதி 4ம் கட்டை பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள்... Read more »
பார்வையாளர்கள் வழங்கிய ஆதரவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை வெற்றியீட்டியதை தொடர்ந்து இன்று நாடு திரும்பிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை... Read more »
இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை... Read more »
தாய்ப்பால் புரைக்கேறி ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரவ் பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவவில் வசித்து வந்த பத்திரன புஷ்பகுமார என்பவரின் நிபுல சஞ்சனா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது தாயின்... Read more »
வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் கதைவை மூடி திருடர் தப்பித்துள்ளார். வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »
அனைத்தையும் விட மக்களின் உயிர் முக்கியமானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை உரிய முறையில் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருந்து பொருட்களை... Read more »
இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சென் சூ இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்காக வெளிப்படையாகப்... Read more »
இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு... Read more »
இலங்கையில் உண்டியல் மற்றும் ஹவாலா முறையின் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதை பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும்... Read more »
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட மூன்று எரிபொருள் கப்பல்கள் சில நாட்களாக தரித்து நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்களுக்கு செலுத்த கையிருப்பில் போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தினால்... Read more »