அனைத்தையும் விட மக்களின் உயிர் முக்கியமானது! கெஹலிய ரம்புக்வெல்ல

அனைத்தையும் விட மக்களின் உயிர் முக்கியமானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை உரிய முறையில் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்து பொருட்களை விநியோகம் செய்வதற்கு காணப்படும் மரபு ரீதியான சட்ட தடைகளை தளர்த்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினால் அதற்கான பொறுப்பினை அந்தந்த துறையினருக்கு ஏற்க நேரிடும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin