வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம்…../ திருமதி கருணாவதி பத்தமநாதன்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் செயற்படும்  ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்க பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்தமநாதன் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வலசெய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

வடமராட்சி அல்வாய் வடக்கில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகர முதல்வர் உதவி……!

(நெல்லியடி நிருபர்) தற்போது பெய்துவரும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட அல்வாய் வடக்கு கிராம மக்களுக்கு யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அல்வாய் வடக்கு மகாத்மா வீதியிலுள்ள கடும் மழையால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம்... Read more »

யாழ்.பல்கலைகழக பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர் தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்கான கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பம்.. |

யாழ்.பல்கலைகழக – பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்கான 2ம் கட்ட கட்டிட நிர்மாண பணிகள் தொடங்கப்படவுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாணக் கருத்திட்டம், உலக வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டத்தின்... Read more »

யாழ்.குடாநாடு மற்றும் குடாநாட்டின் அருகில் உள்ள காவிரி படுக்கையில் எண்ணெய் வளமா? |

யாழ்ப்பாணம் குடாநாடு மற்றும் காவிரிப் படுக்கையில் வணிக எண்ணெய் வள இருப்பை கண்டுபிடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக வலுச்சக்தி அமைச்சு கூறியிருக்கின்றது. மன்னார் படுக்கையில் ஏற்கனவே எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணம் குடாநாடு மற்றும் யாழ்ப்பாணம் குடாநாட்டை அண்மித்துள்ள காவிரிப் படுக்கையில்... Read more »

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் செவிப்பறை பாதிப்பு! விசாரணைகள் ஆரம்பம்.. |

யாழ்.காரைநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபர் தாக்கியதில் க.பொ.த சாதாரண தர மாணவனின் ஒருபக்க காதில் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காரைநகர் – இந்துக்கல்லுாரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி... Read more »

நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் புதிய நடைமுறை…….!

திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், கூட்டங்கள், தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதலை பதில் சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ளார்.  புதிய நடைமுறைகள்  இன்று தொடக்கம் 15ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டங்கள் நடத்த... Read more »

கஞ்சா ஏற்றுமதி சட்டபூர்வமாகிறது, நாடாளுமன்றில் வெளியான முக்கிய அறிவிப்பு..! |

கஞ்சா ஏற்றுமதியை மிக விரைவில் சட்டபூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி கூறியிருக்கின்றார்.  நேற்றய தினம் நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை கூறியிருக்கின்றார். எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க... Read more »

24 மணித்தியாலங்களில் 20 வெடிப்பு சம்பவங்கள், அச்சுறுத்தும் எரிவாயு சிலிண்டர்கள், விசாரணை குழு அமைத்தார் ஜனாதிபதி.. |

நாட்டில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தீ பிடிக்கும் சம்பவங்கள் 20 பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மாத்தறை – நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை,... Read more »

உறவினர்களுக்கிடையில் மோதல்! வெட்டு காயங்களுடன் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.. |

யாழ். கரவெட்டி பகுதியில் உறவினர்களுக்கிடையிலான மோதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரவெட்டி மேற்கு பகுதியில் நேற்று நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் த.லக்சன் (28) என்பவரே படுகாயங்களுக்கு உள்ளானார். உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இவர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

யாழ்.மாவட்டத்தில் பாண் விலை 10 ரூபாயினால் உயர்வு! மற்றய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை.. |

யாழ்.மாவட்டத்தில் பாண் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப் பட்டுள்ளதுடன்,  ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது எனவும் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின்... Read more »