![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/12/Ava-valveddu-818x472.jpg)
யாழ். கரவெட்டி பகுதியில் உறவினர்களுக்கிடையிலான மோதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி மேற்கு பகுதியில் நேற்று நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் த.லக்சன் (28) என்பவரே படுகாயங்களுக்கு உள்ளானார்.
உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இவர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணையை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்