கஞ்சா ஏற்றுமதி சட்டபூர்வமாகிறது, நாடாளுமன்றில் வெளியான முக்கிய அறிவிப்பு..! |

கஞ்சா ஏற்றுமதியை மிக விரைவில் சட்டபூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி கூறியிருக்கின்றார். 

நேற்றய தினம் நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை கூறியிருக்கின்றார். எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு கஞ்சா ஏற்றுமதியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்

Recommended For You

About the Author: Editor Elukainews