பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை…..!

பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று 1/1/2022 இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு குழுவினர் குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  28 வயதுடைய கார்த்தி என அழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம்... Read more »

இலங்கைக்கு கடத்த இருந்த 40 லட்சம் மதிப்பிலான சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்:

ராமேஸ்வரம் ஜன 02 இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் உள்ளிட்ட 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள்... Read more »

யாழில் நீண்ட நாட்களின் பின் கொரோனா தொற்றால் ஒருவர் பலி!

நீண்ட நாட்களின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. நுணாவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தை சேர்ந்த முதியவரே கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பொதுச் சுகாதார பரிசோதகர் நேற்று முன்தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தை நேற்று தகனம் செய்ய... Read more »

சிறை சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வந்த அமைச்சர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் பார்வையிட்டு... Read more »

மழை தொடரும் பட்சத்தில் இரணைமடு குளத்தின் கீழ்ப்பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை….!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப்பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் கனகராயன் குளத்தை அண்மித்த  பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மழை தொடரும் பட்சத்தில் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் சிறிய அளவில் நாளை திறக்கப்படும்... Read more »

அவுஸ்திரேலியாவில் திடீரென மூடப்படும் அகதிகள் முகாம்! தவிக்கும் அகதிகள் –

பப்பு நியூ கினியா தீவு நாட்டில் அகதிகளை தடுத்து வைக்கும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் (டிசம்பர் 31)ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என அச்சத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.... Read more »

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என... Read more »

2022 ஆம் ஆண்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்போம்! ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி –

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்... Read more »

வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்……!

ஒரு நொடிப்  பொழுதில் அனைத்துமே மாறலாம், எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் உடைந்து போகாமல் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்போம். எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை மனதில் தெளிவாக உணர்ந்தால் அனைத்தும் கடந்துவிடலாம். இந்த புத்தாண்டு புதுமை படைக்கட்டும்.கடந்தவை எமக்கு பாடமாகவே இருக்கட்டும்.வருபவை களமாகவே... Read more »

உலக சுற்றுலா அழகியாக இலங்கையர் –

2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கையரான நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் ஈக்வடார் 2-வது... Read more »