ஹிஜாப் அணியாத இளம் பெண்ணை அடித்து கொன்ற பொலிஸார்

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும்... Read more »

மீன் சாப்பிடுவதை தவிர்க்கும் மக்கள்.

பொதுமக்கள்  தற்போது பெரிதளவில் மீன்களை கொள்வனவு செய்வதிலலை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் லின்னா, பலாயா, சாலயா, அரிசி ஈக்கள் போன்ற சில வகை... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை... Read more »

திருகோணமலையில் ஒருவர் வெட்டிப் படுகொலை

திருகோணமலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த... Read more »

சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக நடவடிக்கை தொடரும்..! சர்வதேசத்திடம் ரணில் அதிரடி

சட்டத்தை மீறுபவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது அமைதியான மக்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மக்கள் அதனை நம்பியதன் காரணமாக அவர்களின் ஆதரவுடன் தான் நாட்டின் அதிபராக வர முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீது... Read more »

வெளிநாடு அனுப்பவதாக கூறி பண மோசடி! தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் இன்று (16.09) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு, வத்தளை பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினை நடத்தி... Read more »

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியினால் ஆபத்து

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும்  பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் ஆய்விற்கமைய, நாட்டில் பயன்படுத்தப்படும் அரிசியில் ஆர்சனிக் அளவு 0.2 சதவீதம், ஈயம்... Read more »

மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக... Read more »

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்போம் – மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரதம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திப்பூங்கா அருகில்... Read more »

பிள்ளைகள் செத்துப்போவார் என பெற்றோரை பயமுறுத்தி காலாவதியான பைஸர் தடுப்பூசியை ஏற்றுங்கள்! மிரட்டும் சிங்கள மருத்துவர்.

மாணவர்கள் உயிரிழப்பார்கள் என கூறி பெற்றோரை அச்சுறுத்துவதன் மூலம பைஸர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஏற்றுங்கள் என மருத்துவர்களுடனான கலந்துரையாடலில் சிங்கள அதிகாரி ஒருவர் வடக்கு மருத்துவர்களை மிரட்டியுள்ளார்.  இலங்­கை­யி­லேயே வடக்கு மாகா­ணத்­தில்­தான் 4 ஆவது டோஸ் ஏற்­றி­ய­வர்­கள் குறை­வாக உள்­ளார்­கள் என்­றும் அந்­தச் சிங்­கள... Read more »