ஆசிய செம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தலா 2 மில்லியன் ரூபா வழங்கிய சிறிலங்கா கிரிக்கெட்.!

ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஆசிய செம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை அணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த பாராட்டு விழா கொழும்பில் உள்ள... Read more »

மன்னார் இரட்டை படுகொலை! 20 பேரை விளக்கமறியல் வைக்க உத்தரவு

மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (16) உத்தரவிட்டுள்ளார். குறித்த 20 சந்தேக நபர்களும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார்... Read more »

இலங்கைக்கு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம்

இலங்கைக்கு இந்த ஆண்டு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆசிய அபிவிருத்தி வங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘வெரிட் ரிசர்ச்’ என்ற ஆய்வு அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் இந்த... Read more »

பருத்தித்துறை, சாவகச்சேரி வைத்திய சாலைகளுக்கு புதிய அத்தியட்சகர்கள் நியமனம்….!

யாழ்.பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலைக்கு  புதிய வைத்திய அத்தியட்சகர் நியமக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றிய வைத்திய கலாநிதி யாழினி மகேந்திரனே பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு  நியமிக்கப்பட்டுள்ளார்.  இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு  மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பணியாற்றிய வைத்திய கலாநிதி... Read more »

திருமண நிகழ்வில் கடும் மோதல் – பலர் வைத்தியசாலையில் அனுமதி

பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது... Read more »

ஐக்கிய மக்கள்  சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரின் அலுவலகம் மீது இனந்தெரியாதோர்  கல்வீச்சு   தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்  வட்டுக்கோட்டை தொகுதி   அமைப்பாளரும் மனித உரிமைகள் மற்றும் சமூக செயற்பட்டளாருமான முருகவேல் சதாசிவம் அவர்களின்  நல்லூரில் அமைந்துள்ள அலுவலகம் மீது  இனந்தெரியாத நபர்கள்  15/09/2022 வியாழக் கிழமை இரவுநேரம் 10:30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற யாழ் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாசாலை மாணவர் சந்தை…!

யாழ் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாசாலை மாணவர் சந்தை இன்றைய தினம் காலை 9:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் தலமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி  வலயக்கல்வி பணிமனையை  சேர்ந்த கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் நடராஜா காண்டீபன்... Read more »

கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனானது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட  கிரிக்கெட் போட்டியில்  நெல்லியடி மத்திய கல்லூரியை எதிர்த்து விளையாடிய  கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனாகி தேசிய மட்டத்தில்  விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 5 ஒவர்கள்  கொண்ட  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய     கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் 61 ... Read more »

சட்டவிரோதமாக கடல் வழியாக புலம்பெயர முற்பட்ட 26  பேர் இன்று அதிகாலை கைது…..!

சட்டவிரோதமாக. இலங்கையிலிருந்து  புலம்பெயர முற்பட்ட 26  பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல்  பணியில்... Read more »

தியாகதீபம் திலீபன் அவர்களுடைய 35 வது ஆண்டு நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க யாழ் மாநகர முதல்வர் அழைப்பு……!

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தலுக்கான பொதுக்  கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பில்  ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு ... Read more »