தியாகதீபம் திலீபன் அவர்களுடைய 35 வது ஆண்டு நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க யாழ் மாநகர முதல்வர் அழைப்பு……!

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தலுக்கான பொதுக்  கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில்  ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு   குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக  தீபம் திலீபன் அவர்களுடைய  35 வது நினைவேந்தலை ஒரு பொது கட்டமைப்பின் கீழ் ஒரு உருவாக்கி சிறப்பாக நடாத்துவதற்கு சமயத் தலைவர்கள்,  அனைத்து கட்சி தலைவர்கள்,  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்  நாளைய தினம் பிற்பகல் 3:00 மணிக்கு நாவலர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews