திருகோணமலையில் ஒருவர் வெட்டிப் படுகொலை

திருகோணமலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin