கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளை அடுத்தே கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். Read more »
எமது நாட்டில் அவசரநிலைமை காணப்படுவதாக கூறி அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதி தன்னுடைய கைகளில் எடுத்துள்ளார். இதற்கூடாக ஒருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தாது நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான கட்டளையைக்கூட ஜனாதிபதியால் பிறப்பிக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார... Read more »
கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக முன்னெடுக்கவில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மொழி, மத அடிப்படையில் முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எந்தமாவட்டங்களிற்கு தடுப்பூசியை வழங்கவேண்டும் எவ்வளவு தடுப்பூசியை வழங்கவேண்டும்,எந்த தடுப்பூசியை வழங்கவேண்டும்... Read more »
அமைச்சின் ஒருங்கிணைப்புப் பிரிவில் சேவையாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 29 ஆவது பொலிஸ் அதிகாரி இவர் என்று தெரிவிக்கப்படுகிறது.... Read more »
நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த... Read more »
தமிழ் மக்கள் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் இரட்டை வேடமிட்டு செயற்படுகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »
இலங்கை அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். தொழிற்சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடு;த்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள... Read more »
நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தடுப்பூசி நிலையங்களில் அருகில் உள்ள நிலையத்துக்கு சென்று மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர்... Read more »
யாழ்.ஏழாலை சிவகுரு வீதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் தகவல் தருகையில், குறித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாகவும் இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குள் நுழைந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியபோதே குறித்த நபர் கிணற்றில்... Read more »
வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவில் இன்று தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் ஆலய சுற்றாடலில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. உள் வீதியில் தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் பக்தர்கள் ஒன்றுகூடலாம் என்பால் ஆலய சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆலயத்திற்கு... Read more »