நடைபாதை வியாபாரியின் தாக்குதலுக்கு இலக்கான பிரதேசசபை ஊழியர்..! |

யாழ்.இணுவில் மத்திய கல்லுாரிக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பிரதேசசபை வருமான வரி பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பிரதேசசபையின் அனுமதியை பெறாது குறித்த நடைபாதை வியாபாரம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து நடைபாதை வியாபாரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன்போது... Read more »

யாழ்.குருநகரில் கோஷ்டி மோதல்! 3 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.. |

யாழ்.குருநகர் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்திருக்கின்றது.  சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச தகவல்கள் தொிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தொியவருகின்றது Read more »

மாடுகளுக்கு குறி சுட்டால் வழக்குத்தாக்கல் சைவ மகாசபை அதிரடி.. வடக்கு மாகாணத்தின் முதலாவது வழக்கு ஊர்காவற்துறையில் தாக்கல்…..!

அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்... Read more »

செம்மணியில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்து!

யாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது ,... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முறையாக புது வருட பிறப்பை முன்னிட்டு படகு போட்டி!

கிளிநொச்சி அக்கராயன் குளத்தில்  புது வருட பிறப்பை முன்னிட்டு படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகளை அக்கராயனகுளம் மீனவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர். அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் இப் படகு போட்டியில் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். இதனை... Read more »

கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் அறிமுகம்…..!

கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.15 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய கொடி ஏற்றப்பட்டு அரச உத்தியுாகத்தர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து... Read more »

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுதியப் பிரமாணத்தோடு கடமைகள் ஆரம்பம்….!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுதியப் பிரமாணத்தோடு கடமைகள் ஆரம்பமானது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைசெயலாளர் திலீபன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது Read more »

பரந்தன் வர்த்தகர்கள்  இன்று முழுகடையடைப்பு……!

கிளிநொச்சி  பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால்  குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள்  இன்று (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி  பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால்  குத்தி குணரட்னம்... Read more »

இந்தியாவிலிருந்து நாங்கள் வரவில்லை…..!பா.உ.சிறிதரன்.

இந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை. எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்தவகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆண்டியே புதிய இலட்சினை மற்றும் புதிய கொடியுடன் ஆண்டினை தொடங்கியிருக்கின்றீர்கள். ஒரு இனத்தினுடைய... Read more »

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கண்டனம்…….!

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் முழு விபரமும் பின்வருமாறு 03-01-2022 ஊடக அறிக்கை  ... Read more »