காலணிஅணியாத பொலிஸ் சார்ஜென்ட் சேவையிலிருந்து இடைநிறுத்தம்!

கடமையின் போது உத்தியோகபூர்வ சீருடையை அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அதிகாரி தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் காலணிகளை அணிந்து கொண்டு கடமையில் ஈடுபட்டது கமராவில் பதிவாகியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்... Read more »

இலங்கை பெண்ணுக்கு கிடைத்த பிரித்தானியாவின் உயரிய விருது!

சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக்கு, தன்னார்வத் தொண்டர்களுக்கான பொதுநலவாய விருதின் மூலம் இரண்டாம் எலிசபெத் மகாராணி அங்கீகரித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதற்கும் பராமரிப்பதற்கும் எதிரிசிங்க, தன்னார்வ சேவைக்காக 211வது பொதுநலவாய விருது வழங்கப்படுவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 38 வயதான... Read more »

ஊடகவியலாளர் மெலிசியா கொலை விவகாரம்! குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது மேல் நீதிமன்றம்

ஊடகவியலாளர் மெலிசியா குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரத்னம் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த... Read more »

யாழில் பாடசாலை மாணவியொருவர் எடுத்த விபரீத முடிவு

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியே... Read more »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்! (Photo)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சில அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் பணிகளில் திருத்தங்களை செய்துள்ளார். சில அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி நேற்று அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் முறையே 44 (1), 45 (1) மற்றும்... Read more »

இன்றும் மின்வெட்டு! நேரம் தொடர்பான தகவல் வெளியானது

சுழற்சி முறையில் இன்றைய தினமும் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும்... Read more »

என் கணவர் குற்றவாளி என்றால் தண்டியுங்கள்! – மனைவி உருக்கமான கோரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவர் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள்.சந்தேக  நபராக சிறையில் காலத்தை வீணடிக்காதீர்கள் என அவரது மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொள்ளையடித்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 20 பவுண் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பல் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சாவகச்சோி – நெல்லியடி – ஊர்காவற்துறை பகுதிகளை சேர்ந்த குறித்த 3... Read more »

நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு..! பொதுமக்களுக்கு அறிவிப்பு.. |

நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதன்படி, ஏ – பி மற்றும் சி வலயங்களுக்கு 04 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும்... Read more »

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவனில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு முற்றுகையில் ஒருவர் கைது!

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி இடமொன்றை தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெல்லிப்பழை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டது. இதன்போது... Read more »