இலங்கை பெண்ணுக்கு கிடைத்த பிரித்தானியாவின் உயரிய விருது!

சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக்கு, தன்னார்வத் தொண்டர்களுக்கான பொதுநலவாய விருதின் மூலம் இரண்டாம் எலிசபெத் மகாராணி அங்கீகரித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதற்கும் பராமரிப்பதற்கும் எதிரிசிங்க, தன்னார்வ சேவைக்காக 211வது பொதுநலவாய விருது வழங்கப்படுவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

38 வயதான இவர், 110 தன்னார்வ தொண்டர்கள் குழுவின் ஆதரவுடன் 1,500 குழந்தைகளுக்கான சிறுவர் இல்லமொன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில், குறித்த விருதினை பெறுவதில் நான் மகிழ்ச்சியும், பாக்கியமும் அடைகிறேன் என டெபோரா எதிரசிங்க தெரிவித்துள்ளார்.

“என்னைப் பரிசீலித்ததற்கும், அங்கீகரித்ததற்கும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் பெண்களுடனான எனது பணி அதன் வளர்ச்சியையும், ஆதரவையும் வழங்கியமைக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin