கச்சைதீவை மீளப் பெறுவதன் காரணமாக எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம். பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் முகஸ்டாலின் இடம் தெரிவிப்பதாக சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார். கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை தமிழ் நாட்டு முதல்வர் மு.கா ஸ்ராலின் தெரிவித்ததிற்கு தேசிய ரீதியாக... Read more »
21வது திருத்தத்தை தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரிக்கக் கூடாது என்றும் மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் யாழ் ஊடக மையத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »
கடல் வழியாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகில் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்டம் கல்நாட்டினார் குளம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனன். இவர் கடந்த... Read more »
இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்திருந்து டீசல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்தது.வடமராட்சியின் பல்வேறு பகுதியில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல்... Read more »
அயல் வீட்டார் தாக்கியதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு தனது மகளின் வீட்டில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில் பெண்ணொருவர் மரணமடைந்த சம்பவம் இன்று வடமராட்சி நெல்லியடி பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி... Read more »
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகம் தீவைக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் முகப்பு வாசலில் இந்த இடம்பெற்றது. இந்த நினைவேந்தலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் ... Read more »
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பாக, சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான இந்திக தேமுனி டி சில்வா யர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள்... Read more »
வடமாகாணத்திற்கு138 வைத்திய அதிகாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட பட்டுள்ளதாவது. மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளக பயிற்சியை நிறைவுசெய்த வைத்திய... Read more »
ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை நினைவு கூரும் முகமாக இன்று புதன்கிழமை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு 1ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தமிழர்களின் அறிவுப் பொட்டகமான... Read more »
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமயல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில்... Read more »