அகில இலங்கை தமிழ் காங்கிரசால் யாழ் பொது நூலகம் தீவைக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல்….!

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஏற்பாட்டில்  யாழ் பொது நூலகம் தீவைக்கப்பட்ட 41 ஆண்டு
நினைவேந்தல் இன்று மாலை 5 மணியளவில்  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் முகப்பு வாசலில் இந்த இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பொதுநூலகம்1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி அரச காடையர்களால்  தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews